மானாமதுரை அருகே வாலிபரை கத்தியால் குத்திய தாய்–மகன் கைது


மானாமதுரை அருகே வாலிபரை கத்தியால் குத்திய தாய்–மகன் கைது
x
தினத்தந்தி 8 Aug 2018 10:15 PM GMT (Updated: 8 Aug 2018 7:03 PM GMT)

மானாமதுரை அருகே வாலிபரை கத்தியால் குத்திய தாய்–மகனை போலீசார் கைது செய்தனர்.

மானாமதுரை,

சிவகங்கை குமரன் தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் மாரிபாண்டி (வயது 36). இவரிடம் மானாமதுரை பட்டறை தெருவை சேர்ந்தவர் கணேசன்(42) என்பவர் ரூ.1 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இதற்கிடையில் மாரிபாண்டிக்கும், கணேசன் மனைவிக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கணேசனுக்கு தெரியவர, 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

 இந்தநிலையில் நேற்று மாரிபாண்டி கொடுத்த கடனை வாங்குவதற்காக மானாமதுரை சென்றுள்ளார். அப்போது கணேசனும், அவரது தாயார் காயாம்பு(62) ஆகியோர் சேர்ந்து மாரிபாண்டியை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசன், காயாம்பு ஆகியோரை கைது செய்தனர்.


Next Story