மும்பை பல்கலைக்கழக வளாக கழிவறையில் மாணவி மானபங்கம்


மும்பை பல்கலைக்கழக வளாக கழிவறையில் மாணவி மானபங்கம்
x
தினத்தந்தி 10 Aug 2018 10:53 PM GMT (Updated: 10 Aug 2018 10:53 PM GMT)

மும்பை பல்கலைக்கழக மாணவி ஒருவர் பல்கலைக்கழக பதிவாளர் தினேஷ் காம்ளேவிடம் புகார் ஒன்றை அளித்து உள்ளார்.

மும்பை,

பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கழிவறையில் சம்பவத்தன்று மாணவி  இருந்ததாகவும், அப்போது அங்கு வந்த மர்மநபர் மாணவியை மானபங்கம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து பதிவாளர் தினேஷ் காம்ளே கூறியதாவது:-

பாதிக்கப்பட்ட மாணவிக்கு முதலில் கவுன்சிலிங் வழங்கி உள்ளோம். இந்த சம்பவம் குறித்து பல்கலைக்கழக பெண்கள் நல பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் அறிக்கை வந்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story