இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்


இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
x

பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மத்திய ரெயில்வேயின் முல்லுண்டு - மாட்டுங்கா இடையே விரைவு வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 10.37 மணி முதல் மாலை 4 மணி வரை சி.எஸ்.எம்.டி. நோக்கி வரும் விரைவு ரெயில்கள் அனைத்தும் திவா - பரேல் இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும்.

அப்போது மேற்கண்ட ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள எல்லா ரெயில் நிலையங்களிலும் நின்று வரும்.

துறைமுக வழித்தடத்தில் இன்று காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை குர்லா - வாஷி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறும். எனவே காலை 10.34 மணி முதல் பிற்பகல் 3.39 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கு மின்சார ரெயில்கள் இயக்கப்படாது. காலை 10.21 மணி முதல் பிற்பகல் 3.41 மணி வரை பன்வெல், பேலாப்பூர் மற்றும் வாஷியில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கு ரெயில்கள் இயக்கப்படாது. எனினும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நேரத்தில் சி.எஸ்.எம்.டி. - குர்லா, வாஷி - பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இன்று காலை சர்ச்கேட் - மும்பை சென்டிரல் ரெயில் நிலையங் களுக்கு இடையே ஸ்லோ வழித்தடத் தின் இரு மார்க்கத்தி லும் வாராந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.35 மணி வரை 5 மணி நேரத்திற்கு ஸ்லோ மின்சார ரெயில்கள் அனைத்தும் இவ்விரு ரெயில் நிலையங்களுக்கு இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும்.

மேலும் பராமரிப்பு பணி காரணமாக சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த தகவல்கள் மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story