சோளிங்கர் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை


சோளிங்கர் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 12 Aug 2018 10:45 PM GMT (Updated: 12 Aug 2018 9:29 PM GMT)

சோளிங்கர் அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சோளிங்கர்,

சோளிங்கரை அடுத்த ராமபத்திர கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 61). இவர், விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story