ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு


ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 19 Aug 2018 10:15 PM GMT (Updated: 19 Aug 2018 11:18 PM GMT)

சேலம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம்,


ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மேட்டு நாகவம்பாளையத்தை அடுத்த காளிங்கராயன்பாளையம் காந்தி நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சற்குணதாஸ் (வயது 45). தொழிலாளி. இவரது அக்காள் சென்னை குரோம்பேட்டையில் உள்ளார். இவரை பார்ப்பதற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சென்னை சென்றார்.

பின்னர் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து ஈரோடு செல்ல ரெயிலில் வந்தார். நள்ளிரவு சேலம் தின்னப்பட்டி அருகே வந்த போது அவர் ரெயில் படிக்கட்டு அருகே நின்று கொண்டு வந்து உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த அடிபட்ட அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சேலம் ஜங்ஷன் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சற்குணதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story