லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 சிறுவர்கள் காயம்


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 சிறுவர்கள் காயம்
x
தினத்தந்தி 3 Sep 2018 10:15 PM GMT (Updated: 3 Sep 2018 8:53 PM GMT)

சிதம்பரம் சாலை அருகே வந்த போது, அந்த வழியாக வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது.

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் அன்புதாசன் (வயது 15). இவரும் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் கர்னல்ராஜ் (15), பாரதி (15) ஆகிய 3 பேரும் மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டத்திற்கு சென்று கொண்டிருந்தனர். சிதம்பரம் சாலை அருகே வந்த போது, அந்த வழியாக வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் அன்புதாசன் உள்பட 3 பேரும் காயமடைந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story