குரூப்-4 தேர்ச்சி, அசல் சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்யலாம்


குரூப்-4 தேர்ச்சி, அசல் சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்யலாம்
x
தினத்தந்தி 8 Sep 2018 10:15 PM GMT (Updated: 8 Sep 2018 7:14 PM GMT)

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அசல் சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்யலாம் கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளாா்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு பணி தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் கடந்த மாதம் வெளிவந்த குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி இணையம் வாயிலாக மேற்கொள்ள இருப்பதால், தேர்ச்சி பெற்றவர்கள் அவர்களது அசல் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டது,

அதையொட்டி. குரூப் -4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்ப்பதற்கு அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம் என அறிவித்துள்ளது.

எனவே, கடந்த மாதம் வெளிவந்த குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை வருகிற 18-ந்தேதி வரை அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story