வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகள்


வங்கியில் சிறப்பு அதிகாரி பணிகள்
x
தினத்தந்தி 11 Sep 2018 5:18 AM GMT (Updated: 11 Sep 2018 5:18 AM GMT)

பொதுத் துறை வங்கிகளில் ஒன்று மகாராஷ்டிரா வங்கி. தற்போது இந்த வங்கியில் சிறப்பு அதிகாரி பணி மற்றும் சி.ஏ., சி.எம்.ஏ. பணிக்கு 59 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

சி.ஏ., சி.எம்.ஏ. பணிக்கு மட்டும் 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

31-7-2018-ந் தேதியில் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் சி.ஏ., சி.எம்.ஏ. பணிக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் சி.ஏ./ஐ.சி.டபுள்யு.ஏ. படித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 23-9-2018-ந் தேதியாகும். நகல் விண்ணப்பம் 3-10-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். குழு கலந்துரையாடல், நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

இதேபோல சிறப்பு அதிகாரி பணிக்கு 9 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 23 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எம்.பி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ, சி.எப்.ஏ., பொருளாதாரம் முதுநிலைப்படிப்பு, பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு படித்தவர்களுக்கு பணி உள்ளது.

விருப்பமுள்ளவர்கள் முழுமையான விவரங்களை இணைய தளத்தில் பார்த்துவிட்டு 23-9-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விரிவான விவரங்களை https://www.bankofmaharashtra.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

Next Story