ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் ராக்கிங் செய்த 3 மாணவர்கள் கைது


ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் ராக்கிங் செய்த 3 மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 20 Sep 2018 9:30 PM GMT (Updated: 20 Sep 2018 7:58 PM GMT)

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் ராக்கிங் செய்த 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி,


நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு இளங்கலை, முதுகலை பாடப் பிரிவுகளில் 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இளங்கலை விலங்கியல் துறையில் 2-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்களான அனிஷ் மைக்கேல், சுஜித்குமார், சிவக்குமார் ஆகிய 3 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, அதே துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலரை ராக்கிங் செய்து உள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில், கல்லூரி முதல்வர் தலைமையில் இயங்கும் ராக்கிங் தடுப்புக்குழு விசாரணை நடத்தியது. இதில் கல்லூரி மாணவர்கள் 3 பேரும் சேர்ந்து ராக்கிங் செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, அந்த 3 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தர விட்டது.

மேலும் ராக்கிங் குறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் ராக்கிங் செய்த மாணவர்கள் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அரசு கலைக்கல்லூரியில் ராக்கிங் செய்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப் பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story