கிருஷ்ணா நதிநீர் வரத்தால் பூண்டி ஏரி நீர்மட்டம் 8 அடி அதிகரிப்பு


கிருஷ்ணா நதிநீர் வரத்தால் பூண்டி ஏரி நீர்மட்டம் 8 அடி அதிகரிப்பு
x
தினத்தந்தி 4 Oct 2018 11:00 PM GMT (Updated: 4 Oct 2018 5:48 PM GMT)

கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் 7.73 அடி அதிகரித்துள்ளது.

ஊத்துக்கோட்டை,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து கடந்த 29-ந்தேதி முதல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று காலை வினாடிக்கு 620 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

கடந்த 29-ந்தேதி ஏரியின் நீர்மட்டம் 12.25 அடியாக பதிவாகி வெறும் 13 மில்லியன் கனஅடி மட்டும்தான் இருப்பில் இருந்தது. தற்போது கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என்று அதிகரித்து வருகிறது.

பூண்டி ஏரியில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 19.98 அடியாக பதிவானது. 249 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

அதாவது கடந்த 29-ந்தேதி முதல் நேற்று காலை வரை 5 நாட்களில் நீர்மட்டம் 7.73 அடி அதிகரித்துள்ளது. கிருஷ்ணா நதிநீர் வரத்து தற்போது வருவது போல் தொடர்ந்தால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளது.

Next Story