சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்


சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 Oct 2018 11:08 PM GMT (Updated: 11 Oct 2018 11:08 PM GMT)

உற்பத்தி செய்த பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை சேலம் கடை வீதியில் உள்ள வாசவி மகாலில் நேற்று நடைபெற்றது. இந்த கண்காட்சியை பன்னீர்செல்வம் எம்.பி. ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

சேலம்,

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை சேர்ந்த பயனாளிகள் உற்பத்தி செய்த பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை சேலம் கடை வீதியில் உள்ள வாசவி மகாலில் நேற்று நடைபெற்றது. இந்த கண்காட்சியை பன்னீர்செல்வம் எம்.பி. ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். கலெக்டர் ரோகிணி குத்துவிளக்கேற்றி கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். கே.வி.ஐ.சி. உதவி இயக்குனர்கள் வசிராஜன், பிரபாகர் ஆகியோர் பி.எம்.இ.ஜி.பி. திட்டம் குறித்து பேசினர்.

கண்காட்சியில், கதர் ஆடைகள், மெத்தை, தலையணை, சிறு தானிய உணவு பொருட்கள், காலணிகள், மரசெக்கு எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. மேலும் 15 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மத்திய அரசின் மானியத்துடன் வங்கி கடன் மூலமாக புதிதாக கிராமம், நகர்ப்புறங்களில் தொழில் தொடங்க இக்கண்காட்சியில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தொழிற்துறை பொதுமேலாளர் ராமச்சந்திரன், காதி கிராம தொழில் துறை வாரிய உதவி இயக்குனர் ரூபி அலிமாபாய், சர்க்கார் கொல்லப்பட்டி கிராம சேவா சங்க பொதுமேலாளர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி மற்றும் விற்பனை இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) என 2 நாட்கள் நடக்கிறது.

Next Story