கடலூர் முதுநகர் அருகே: பெட்டிக்கடைக்காரர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


கடலூர் முதுநகர் அருகே: பெட்டிக்கடைக்காரர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகை கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 26 Oct 2018 10:00 PM GMT (Updated: 26 Oct 2018 10:47 PM GMT)

கடலூர் முதுநகர் அருகே பெட்டிக்கடைக்காரர் வீட்டில் ரூ.2½ லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர் முதுநகர்,

கடலூர் முதுநகர் அருகே பெரியகாரைக்காட்டை சேர்ந்தவர் சிவாஜி (வயது 55). இவர் தனது வீட்டு முன்பு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தோடு முது நகரில் நடந்த சுபநிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.

பின்னர் அவர் திரும்பி வந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த துணி மணிகள் சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை பார்த்தார். அங்கே அவர் வைத்திருந்த செயின், மோதிரம் உள்பட 11½ பவுன் நகைகளை காணவில்லை. மேலும் வீட்டில் இருந்த டி.வி.யையும் காணவில்லை. கொள்ளைபோன நகையின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும்.

இவர் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் இரும்பு கதவு வழியாக உள்ளே புகுந்து, திறந்து இருந்த ஷட்டரை தூக்கி வீட்டுக்குள் சென்று நகைகள் மற்றும் டி.வி.யை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. பின்னர் இது பற்றி சிவாஜி கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story