குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு


குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 7 Nov 2018 10:15 PM GMT (Updated: 7 Nov 2018 9:01 PM GMT)

குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

நாகர்கோவில்,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் இணைந்து குமரி கிழக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன்படி மாவட்ட அவைத்தலைவராக சேவியர் மனோகரன், இணை செயலாளராக லதா ராமச்சந்திரன், துணை செயலாளர்களாக பாக்கியலெட்சுமி மற்றும் ராஜன், பொருளாளராக திலக் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதே போல எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக சிதம்பரநாதபிள்ளை என்ற தங்கம், செயலாளராக நரசிங்கமூர்த்தி, பேரவை தலைவராக சாம்ராஜ், செயலாளராக ராஜாராம், எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவராக ஷாஜி கண்ணன், செயலாளராக ஜெயசீலன், மகளிரணி தலைவராக சாந்தி அலெக்ஸ், செயலாளராக ஹெப்சிபாய் இன்பராணி, மாணவரணி தலைவராக கோல்டுவின், செயலாளராக மனோகரன், அண்ணா தொழிற்சங்க தலைவராக ரோஞ்சாலீஸ், செயலாளராக சுகுமாரன், வக்கீல் பிரிவு தலைவராக நடராஜமூர்த்தி, செயலாளராக சுந்தரம், சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவராக ரவிக்குமார் என்ற நகுலன், செயலாளராக ஜெகதீஸ், விவசாய பிரிவு தலைவராக மகாதேவன், செயலாளராக பொன்.சுந்தர்நாத். மீனவர் பிரிவு தலைவராக ஆன்றோ வின்சென்ட், செயலாளராக திமிர்த்தியூஸ், மருத்துவரணி தலைவராக தாணப்பன், செயலாளராக சி.என்.ராஜதுரை, இலக்கிய அணி தலைவராக சந்திரன், செயலாளராக பூங்கா கண்ணன், அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி தலைவராக சேம்ராஜ், செயலாளராக வைகுண்டமணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவராக ராபின்சன், செயலாளராக ஷானவாஸ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக முத்துக்குமார், செயலாளராக சதீஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். பொதுக்குழு உறுப்பினர்களாக மேரிபெல்சி, சகாயராஜ், சுப்பிரணியன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்று தோவாளை ஒன்றிய செயலாளராக கிருஷ்ணகுமார், ராஜாக்கமங்கலம் ஒன்றிய செயலாளராக வீராச்சாமி, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளராக அழகேசன் ஆகியோரும், நாகர்கோவில் நகரச் செயலாளராக சந்துரு என்ற ஜெயச்சந்திரன், குளச்சல் நகர செயலாளராக ஆண்ட்ரோஸ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் வார்டு நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். 

Next Story