கீழ்பென்னாத்தூர் அருகே மொபட் மோதி முதியவர் பலி


கீழ்பென்னாத்தூர் அருகே மொபட் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 10 Nov 2018 10:30 PM GMT (Updated: 10 Nov 2018 4:09 PM GMT)

கீழ்பென்னாத்தூரை அடுத்த கொளத்தூரை சேர்ந்தவர் அண்ணாமலை மீது மொபட் எதிர்பாராதவிதமாக மோதி உயிரிழந்தார்.

கீழ்பென்னாத்தூர், 

கீழ்பென்னாத்தூரை அடுத்த கொளத்தூரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 70). இவர் ரேஷன்கார்டு கேட்டு கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றார். அதன்பின் ஊருக்கு திரும்ப பஸ் நிறுத்தத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார் அப்போது பின்னால் வந்த மொபட் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அண்ணாமலை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீழ்பென்னாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story