தண்டராம்பட்டு அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது


தண்டராம்பட்டு அருகே நாட்டு துப்பாக்கியுடன் சுற்றி திரிந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Nov 2018 10:30 PM GMT (Updated: 17 Nov 2018 2:39 PM GMT)

தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் வனப்பகுதியில் நேற்று முன்தினம் வன அலுவலர் ராமநாதன் தலைமையில் வனவர்கள் வெங்கட்ராமன், குமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 பேர் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர்.

தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டு அருகே சாத்தனூர் வனப்பகுதியில் நேற்று முன்தினம் வன அலுவலர் ராமநாதன் தலைமையில் வனவர்கள் வெங்கட்ராமன், குமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 பேர் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர்.

வனத்துறையினரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். வனத்துறையினர் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் (வயது 25), ரத்தினம் (44), கண்ணன் (50) என்பதும், அங்கு வனவிலங்குகள் வேட்டையாட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story