திருவெண்ணெய்நல்லூர் அருகே: விஷம் குடித்து பெண் தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை


திருவெண்ணெய்நல்லூர் அருகே: விஷம் குடித்து பெண் தற்கொலை - காரணம் என்ன? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 20 Nov 2018 10:00 PM GMT (Updated: 20 Nov 2018 5:57 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள வில்லிவலம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் வையாபுரி. விவசாயி. இவருடைய மனைவி கவுதமி (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் உதய் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கவுதமி, விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுதமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story