மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி புயலில் அறுந்து விழுந்த மின்கம்பியை தொட்டதால் பரிதாபம்


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி புயலில் அறுந்து விழுந்த மின்கம்பியை தொட்டதால் பரிதாபம்
x
தினத்தந்தி 1 Dec 2018 10:45 PM GMT (Updated: 1 Dec 2018 7:46 PM GMT)

ஒரத்தநாடு அருகே மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார். புயலின்போது அறுந்து விழுந்த மின்கம்பியை அவர் தொட்டதால் இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பேய்க்கரும்பன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர்ஆறுமுகம்(வயது 55). தொழிலாளியான இவர் நேற்று காலை தனது மாடுகளை அருகே உள்ள குளக் கரைக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

அப்போது அங்கு புயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை ஆறுமுகம் தெரியாமல் தொட்டதாக தெரிகிறது. அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாப்பாநாடு போலீசார், ஆறுமுகத்தின் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story