கர்நாடகத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்த திட்டம் மந்திரி ஜெயமாலா பேச்சு


கர்நாடகத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நடத்த திட்டம் மந்திரி ஜெயமாலா பேச்சு
x
தினத்தந்தி 3 Dec 2018 10:40 PM GMT (Updated: 3 Dec 2018 10:40 PM GMT)

கர்நாடகத்தில் மாற்றுத்திறனாளிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக மந்திரி ஜெயமாலா கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக அரசின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் தின விழா பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். இதில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் துறை மந்திரி ஜெயமாலா பேசியதாவது:-

கர்நாடகத்தில் மாற்றுத்திறனாளிகள் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் இந்த கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. இதற்கு முதல்-மந்திரி குமாரசாமி அனுமதி வழங்க வேண்டும்.

தற்போது 7 வகையான மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அரசு உதவி செய்கிறது. ஆனால் 21 வகையான மாற்றுத்திறனாளிகள் இருக்கிறார்கள். அவர்களையும் சட்டத்திற்குள் கொண்டு வந்து, அரசின் உதவிகளை செய்ய வேண்டும்.

சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, அமல்படுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் ெதாடர்ந்து அமல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு ஜெயமாலா பேசினார்.

விழாவில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக சேவையாற்றும் அமைப்புகள், மாற்றுத்திறனாளி சாதனையாளர்களுக்கு முதல்-மந்திரி குமாரசாமி விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் அவர்களுடன் கலந்துரையாடினார்.

Next Story