பாபர் மசூதி இடிப்பு தினம்: முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பாபர் மசூதி இடிப்பு தினம்: முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:00 PM GMT (Updated: 6 Dec 2018 10:02 PM GMT)

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி அதுதொடர்பான வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி மதுரையில் முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரை, 

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மதுரையில் முஸ்லிம் அமைப்பினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பாபர் மசூதி வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். அதே இடத்தில் பாபர் மசூதியை கட்ட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் முனிச்சாலை ஒபுளா படித்துறை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முஜிபுர் ரகுமான் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயலாளர் அர்ஷத் அகமது அல்தாபி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் காஜா முகைதீன் ஆகியோர் உரையாற்றினர்.

இதேபோல் தெற்கு வாசல் சின்னக்கடை தெருவில் த.மு.மு.க. சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் ஷேக் இப்ராகிம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். குப்புபிள்ளை தோப்பில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story