நிலத்தகராறில் விவசாயி கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை ஓசூர் கோர்ட்டு தீர்ப்பு


நிலத்தகராறில் விவசாயி கொலை: 2 பேருக்கு ஆயுள் தண்டனை ஓசூர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 20 Dec 2018 10:45 PM GMT (Updated: 20 Dec 2018 4:25 PM GMT)

நிலத்தகராறில் விவசாயியை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள உலியாளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜப்பா (வயது 38). விவசாயி. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜரெட்டி (38) குடும்பத்தினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இதுதொடர்பான வழக்கு ஓசூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 14.9.2004 அன்று ராஜப்பா தனது மொபட்டில் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள நர்சரி பக்கமாக சென்றார். அப் போது நாகராஜரெட்டி உள்ளிட்ட சிலர் அவரை வழிமறித்து மிளகாய் பொடி தூவினார்கள். மேலும் அவரது உடலில் திராவகம் ஊற்றி தாக்கினார்கள். இதில் ராஜப்பா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்த கொலை தொடர்பாக பாகலூர் போலீசார் விசாரணை நடத்தி நாகராஜரெட்டி உள்பட 13 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையின் போதே நாகிரெட்டி என்பவர் இறந்து விட்டார். மீதம் உள்ள 12 பேர் மீதும் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அசோகன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட நாகராஜரெட்டி மற்றும் ஸ்ரீதர் ரெட்டி (30) ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,500 அபராதம் விதித்தும், கட்டத்தவறினால் 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். வழக்கில் மீதம் உள்ள 10 பேர் மீது குற்றம் நிருபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வேலாயுதம் ஆஜராகி வாதாடினார்.

Next Story