வானூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


வானூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Dec 2018 10:15 PM GMT (Updated: 24 Dec 2018 6:50 PM GMT)

வானூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்,

வானூர் அருகே ஆதனப்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக அதே கிராமத்தை சேர்ந்த ரகு என்பவர் உள்ளார்.

இவர் நேற்று முன்தினம் மாலையில் கோவிலில் பூஜைகளை முடித்த பின்னர் வழக்கம்போல் கோவில் கதவை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை கோவிலை திறக்க வந்தார்.

அப்போது கோவிலின் முன்புற வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே அருகில் சென்று பார்த்தபோது உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணம் கொள்ளை போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த சுமார் ரூ.5 ஆயிரத்தை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து ரகு, கிளியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story