விடுமுறை தினத்தையொட்டி சிறுவர் அறிவியல் பூங்காவில் அலைமோதிய கூட்டம்


விடுமுறை தினத்தையொட்டி சிறுவர் அறிவியல் பூங்காவில் அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 30 Dec 2018 10:45 PM GMT (Updated: 30 Dec 2018 8:21 PM GMT)

விடுமுறை தினத்தையொட்டி நேற்று பெரம்பலூர் சிறுவர் அறிவியல் பூங்காவில் கூட்டம் அலைமோதியது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறுவர் அறிவியல் பூங்கா தோட்டமும், சிறுவர்கள் விளையாடும் வகையில் ஊஞ்சல்கள், சறுக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களும், அறிவியல் தத்துவத்தை பயன்படுத்தி இயங்கும் வகையில், பல்வேறு அறிவியல் உபகரணங்களும் உள்ளன.

பெரம்பலூர் நகரில் எவ்வித பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாததால் இந்த சிறுவர் அறிவியல் பூங்காவிற்கு தான் பெரம்பலூர் பொதுமக்கள் வந்து பொழுதை கழித்து செல்வது வழக்கம். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பூங்காவில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும்.

தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் பூங்காவில் கூட்டம் அலைமோதியது. பூங்காவில் குழந்தைகள் ஊஞ்சல்களில் ஆடுவதும், சறுக்கு உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களிலும் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். மேலும் தங்களது குழந்தைகளை விளையாடுவதை பெற்றோர் செல்போனில் புகைப்படம், வீடியோ எடுத்தனர். நிறைய பேர் தனது உறவினர்களுடன் பூங்காவிற்கு வந்து அமர்ந்து பேசி கொண்டிருந்ததை காணமுடிந்தது.

Next Story