இருளில் மூழ்கிய கிராமத்திற்கு ஒளி கொடுக்க டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி சாவு


இருளில் மூழ்கிய கிராமத்திற்கு ஒளி கொடுக்க டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி சாவு
x
தினத்தந்தி 2 Jan 2019 10:15 PM GMT (Updated: 2 Jan 2019 7:47 PM GMT)

மின்தடையால் இருளில் மூழ்கிய கிராமத்துக்கு ஒளி கொடுக்க டிரான்ஸ்பார்மரில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், காமரசவல்லி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் அழகேந்திரன் (வயது 27). சம்பவத்தன்று அந்த கிராமத்தில் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால், கிராமம் இருளில் மூழ்கியது. இதனை பார்த்து வேதனை அடைந்த அழகேந்திரன் அதனை சரிசெய்ய கிராமத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் (மின்மாற்றி) மீது ஏறினார். அப்போது அழகேந்திரன் மீது மின்சாரம் தாக்கியது. அப்போது மின்மாற்றியில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் அவர் படுகாயமடைந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அழகேந்திரன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக தூத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story