புயல் நிவாரணம் வழங்கக்கோரி 10 கிராம மக்கள் சாலை மறியல் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

புயல் நிவாரணம் வழங்கக்கோரி கோட்டூரில், 10 கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோட்டூர்,
திருவாரூர் மாவட்டம், கோட்டூர், தாளந்திருவாசல், சோத்திரியம், புழுதுகுடி, குமாரமங்கலம், ஈசணக்குடி, சோழங்கநல்லூர், சபாபதி புரம், சோமாசி, ஆண்டிக்கோட்டகம் ஆகிய 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பழைய தொகுப்பு வீடுகள், ஓட்டு வீடுகள் மற்றும் விடுபட்ட கூரை வீடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குடும்ப அட்டைகள் உள்ள அனைவருக்கும் 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தாசில்தார் லெட்சுமிபிரபா, கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால்சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், கோட்டூர், தாளந்திருவாசல், சோத்திரியம், புழுதுகுடி, குமாரமங்கலம், ஈசணக்குடி, சோழங்கநல்லூர், சபாபதி புரம், சோமாசி, ஆண்டிக்கோட்டகம் ஆகிய 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பழைய தொகுப்பு வீடுகள், ஓட்டு வீடுகள் மற்றும் விடுபட்ட கூரை வீடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குடும்ப அட்டைகள் உள்ள அனைவருக்கும் 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தாசில்தார் லெட்சுமிபிரபா, கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால்சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story