பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Jan 2019 10:45 PM GMT (Updated: 5 Jan 2019 7:35 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில், சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் தமிழ்செல்வம், மாவட்ட செயலாளர் உதயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுரளி கலந்துகொண்டு பேசினார். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு நிரந்தர ஊதிய தொகுப்பில் மாத ஊதியம் வழங்க வேண்டும்.

பணிநீக்க காலத்தில் உயிர்நீத்த சாலைப்பணியாளர் வாரிசுகளுக்கு விதிமுறைகளை தளர்த்தி பணி வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணியை தனியாரிடம் விடுவதை கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட துணை தலைவர்கள் ரவி, ஐயப்பன், துணை செயலாளர் செல்வம், வட்ட பொருளாளர் ரஞ்சித் குமார், செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

Next Story