திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்–2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மூலக்குளம்,
புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.(வயது 23). இவர் பிளஸ்–2 மாணவி ஒருவருடன் பழகி வந்தார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது அந்த மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து குழந்தைகள் நலக்குழுவிடம் புகார் தெரிவித்தனர். குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் ராஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.
உடனே அவர்கள் இது குறித்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், உதவி சப்–இன்ஸ்பெக்டர் ஜான் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.