நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 4 Feb 2019 3:30 AM IST (Updated: 4 Feb 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வந்தார். பின்னர் விருந்தினர் மாளிகையில் அவர் நிருபர் களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

இந்திய சரித்திரத்தில் முதன்முறையாக அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கப்பட்டு ஏற்கப்பட்ட பட்ஜெட்டை பிரதமர் மோடி தலைமையிலான அரசு தரப்பில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் அறிவித்தார். நாடு முழுவதும் 5 ஏக்கர் நிலத்தை கொண்ட விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் அளிக்கக்கூடிய திட்டத்தை அரசு அறிவித்தது விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பயிர் செய்வதற்கு பணமில்லாத நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. 3 கட்டமாக இந்த தொகை வழங்கப்படுகிறது.

பட்ஜெட் தாக்கல் செய்யும்போது காங்கிரஸ் பெரிய அளவில் கூச்சல் போட்டது. பாமர ஏழை மக்களுக்கு அறிவிக்கப்படும் நலத்திட்டங்களை அவர் களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் தேர்தல் கண்ணோட்டத்தோடு இதை பார்க்கிறார்கள். ஆனால் பா.ஜனதா இதை தேர்தல் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. அனைத்து தரப்பு மக்களும் திருப்திகரமாக வரவேற்கக்கூடிய வகையில் இந்த பட்ஜெட் அமைந் துள்ளது.

130 கோடி மக்கள் ஏற்றுக்கொண்ட பட்ஜெட்டை காங்கிரஸ் கட்சியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த கட்சி, இதுவரை தாக்கல் செய்துள்ள 10 பட்ஜெட்டிலும் ஏதாவது நல்ல திட்டத்தை அறிவித்தார்களா?

தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி ஜெயிக்கும் என்பது கருத்து கணிப்பல்ல. கருத்து திணிப்பாகும். தமிழகத்தில் வரும் தேர்தலில் பலம் பொருந்திய கூட்டணியாக பா.ஜனதா அங்கம் வகிக்கும் கூட்டணி திகழும். 2014-ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் 20 சதவீத வாக்குகளை பா.ஜனதா அங்கம் வகித்த கூட்டணி பெற்றது. தற்போது பா.ஜனதா அங்கம் வகிக்கக் கூடிய கூட்டணி முதல் நிலையை அடையும் கூட்டணி யாக இருக்கும்.

பிரதமர் மோடி தலைமை யிலான அரசு சொன்னதை நடைமுறைப்படுத்தும் அரசு வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி 30 இடங்களில் வெற்றி பெறும் என நினைத்திருந்தேன். ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்ட பிறகு 40 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாநில பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேல், நகர தலைவர் வக்கீல் சரவணன், மாவட்ட செயலாளர் அரசமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துகுமார், சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர். 

1 More update

Next Story