விதிமுறைகள் மீறினால் எருது விடும் விழா உடனடியாக நிறுத்தப்படும் கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை


விதிமுறைகள் மீறினால் எருது விடும் விழா உடனடியாக நிறுத்தப்படும் கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 13 Feb 2019 10:30 PM GMT (Updated: 13 Feb 2019 6:58 PM GMT)

விதிமுறைகளை மீறினால் எருதுவிடும் விழா உடனடியாக நிறுத்தப்படும் என மாவட்ட கலெக்டர் பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் நேற்று முன்தினம் எருது விடும் விழாவின் போது 2 மாடுகள் செத்தன. இந்த நிலையில் எருது விடும் விழா குறித்து கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பொங்கல் முதல் எருது விடும் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. எருது விடும் விழாக்களில் காளைகள் எந்த கிராமத்தில் இருந்து அழைத்து வரப்படுகிறதோ அந்த பகுதியில் உள்ள கால்நடை மருத்துவரிடம் புகைப்படத்துடன் கூடிய சான்று பெற்று வந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

பசுக்களை எருது விடும் விழா நிகழ்ச்சியில் அனுமதிக்கக் கூடாது என்று விதிமுறைகள் உள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் நிகழ்ச்சிகள் உடனடியாக நிறுத்தப்படும். அடுத்து வரும் ஆண்டுகளில் அந்த கிராமத்தில் எருது விடும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்படும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story