புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்


புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்
x
தினத்தந்தி 16 Feb 2019 11:00 PM GMT (Updated: 16 Feb 2019 10:46 PM GMT)

புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

மதுரை,

மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

அதன்படி இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் நடைபெறும் கூட்டத்திற்கு கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பங்கேற்கின்றனர். மாலையில் உசிலம்பட்டியில் நடைபெறும் கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்–அமைச்சருமன ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.

நாளை (திங்கட்கிழமை) காலையில் சோழவந்தான் தொகுதியில் நடைபெறும் கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் அமைப்பு செயலாளர் நத்தம் விசுவநாதன் பங்கேற்கின்றனர். மாலையில் மேலூர் தொகுதியில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்கின்றனர்.

20–ந் தேதி காலையில் திருமங்கலத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்கிறார். மதுரை கிழக்கு தொகுதியில் மாலையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, மணிகண்டன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த ஆலோசனை கூட்டங்களில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இதில் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story