திருவாரூரில் ரூ.6½ கோடியில் அரசு கட்டிடம் கட்டும் பணி கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்தார்


திருவாரூரில் ரூ.6½ கோடியில் அரசு கட்டிடம் கட்டும் பணி கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 March 2019 10:45 PM GMT (Updated: 10 March 2019 6:58 PM GMT)

திருவாரூரில் ரூ.6½ கோடியில் அரசு கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.6 கோடியே 52 லட்சம் மதிப்பிலான ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை பணிகள் நேற்று நடந்தது. இப்பணியினை மாவட்ட கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ரூ.6 கோடியே 52 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அலுவலக கட்டிடம் கட்டப்படுகிறது. இந்த கட்டிடத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), உதவி இயக்குனர் (தணிக்கை), காணொலி ஆய்வு அறை, ஆய்வு கூட்ட அரங்கம் ஆகியவை அமைய உள்ளது என்றார்.

இதில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, செயற்பொறியாளர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர்கள் மூர்த்தி, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story