பாலியல் கும்பல் மீது நடவடிக்கை கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்


பாலியல் கும்பல் மீது நடவடிக்கை கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 14 March 2019 10:30 PM GMT (Updated: 14 March 2019 8:03 PM GMT)

பொள்ளாச்சியில், பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்தும், அதில் சம்பந்தப்பட்ட கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர்.

பொன்மலைப்பட்டி,

பொள்ளாச்சியில், பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்தும், அதில் சம்பந்தப்பட்ட கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர். பின்னர், இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் காட்டூர் ஆயில் மில் வரை ஊர்வலமாக வந்து திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக நோயாளியை ஏற்றிக் கொண்டு 108 ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்ஸ் செல்ல மாணவர்கள் எழுந்து வழிவிட்டனர். மறுபடியும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்டதாக 30 மாணவர்களை அரியமங்கலம் போலீசார் கைது செய்து மாலை விடுவித்தனர். 

Next Story