தோகைமலை அருகே வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.1¾ லட்சம் பறிமுதல்


தோகைமலை அருகே வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.1¾ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 26 March 2019 10:45 PM GMT (Updated: 26 March 2019 8:42 PM GMT)

தோகைமலை அருகே வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.1¾ லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தோகைமலை,

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே குளித்தலை- மணப்பாறை மெயின்ரோட்டில் உள்ள நாடக்காபட்டி பிரிவு ரோடு அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன், போலீசார் ஆனந்தன், சரவணன், அருண் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மதுரையில் இருந்து முசிறிக்கு வந்த வேனை, பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அந்த வேனில் ரூ.1 லட்சத்து 74 ஆயிரம் இருந்தது.

இது பற்றி வேனில் வந்தவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த பிச்சை மகன் ரமேஷ்(வயது 34) என்பதும், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் துணை அதிகாரி லியாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story