ராஜபாளையம் அருகே, தொழிலாளியை வெட்டிக்கொலை செய்தவர் கைது


ராஜபாளையம் அருகே, தொழிலாளியை வெட்டிக்கொலை செய்தவர் கைது
x
தினத்தந்தி 9 May 2019 10:00 PM GMT (Updated: 9 May 2019 10:26 PM GMT)

ராஜபாளையம் அருகே ரூ.600 கடனை திருப்பித்தராததால் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ராஜபாளையம், 

ராஜபாளையம் அருகேயுள்ள எஸ்.ராமலிங்காபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது55). கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி(45) என்பவரிடம் ரூ.600 கடன் வாங்கி இருந்தார். கடனை திருப்பிக்கொடுக்காத நிலையில் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பஜாரில் கோவிந்தன் நின்று கொண்டிருந்தார். அப்போது ஈஸ்வரமூர்த்தி அங்கு வந்து கடனை திருப்பிக்கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஈஸ்வரமூர்த்தி ஆத்திரம் அடைந்து கோவிந்தனை அரிவாளால் வெட்டினார். பலத்த காயம் அடைந்த கோவிந்தன் சிகிச்சைக்காக பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார். இதை தொடர்ந்து ஈஸ்வரமூர்த்தி மீது கொலை வழக்கு பதிவு செய்த கீழராஜகுலராமன் போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story