குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் 3-ம் கட்ட கலந்தாய்வு 18-ந்தேதி நடக்கிறது


குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் 3-ம் கட்ட கலந்தாய்வு 18-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 10 Jun 2019 10:15 PM GMT (Updated: 10 Jun 2019 8:29 PM GMT)

குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் 3-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 18-ந்தேதி நடக்கிறது.

குளித்தலை,

குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் 2019-20-ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 2 கலந்தாய்வுகளில் இக்கல்லூரியில் உள்ள தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வணிகவியல், வணிகவியல் (கணினி பயன்பாட்டியியல்), வணிக மேலாண்மை, கணிதவியல், இயற்பியல், மின்னனுவியல், வேதியியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல் ஆகிய 12 இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் இருந்த 545 இடங்களில் 503 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

அசல் மற்றும் நகல்கள்

மீதமுள்ள இடங்களுக்கு வரும் 18-ந்தேதி 3-ம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்விலும் மாணவ, மாணவிகளின் தரவரிசை அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது. கல்லூரி சேர்க்கைக்கான விண்ணப்பங்களை கல்லூரியில் தாமதமாக சமர்ப்பித்த மாணவ, மாணவிகளும் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். கல்லூரி சேர்க்கைக்கு வரும் மாணவ, மாணவிகள் தங்களின் மாற்று சான்றிதழின் அசல் மற்றும் நகல்கள் 2, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்களின் அசல் மற்றும் நகல்கள் 2, சாதிச் சான்றிதழின் அசல் மற்றும் நகல்கள் 2, ஆதார் அட்டையின் அசல் மற்றும் நகல்கள் 2, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2, கல்லூரிக்கு செலுத்த வேண்டிய கட்டணத் தொகை ஆகியவற்றைக் கொண்டுவரவேண்டும். மேலும் மாணவ, மாணவிகள் அவசியம் தங்களின் பெற்றோருடன் வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story