அரியலூரில் ஜமாபந்தி 19-ந் தேதி தொடக்கம்


அரியலூரில் ஜமாபந்தி 19-ந் தேதி தொடக்கம்
x
தினத்தந்தி 13 Jun 2019 11:00 PM GMT (Updated: 13 Jun 2019 7:49 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி வருகிற 19-ந் தேதி முதல் தொடங்குகிறது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) வருகிற 19-ந் தேதி முதல் தொடங்குகிறது. அதன்படி உடையார்பாளையம் தாலுகாவிற்கான ஜமாபந்தி ஜெயங்கொண்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் (எனது) தலைமையில் நடைபெறும். இதில் தா.பழூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட இருகையூர், காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, தென்கச்சிபெருமாள் நத்தம், தா.பழூர், கோடங்குடி (வடபாகம்), கோடங்குடி (தென்பாகம்), நாயகனைப்பிரியாள், இடங்கண்ணி, உதயநத்தம் (மேல்பாகம்), உதயநத்தம் (கீழ்பாகம்), அணைக்குடம் (பொற்பதிந்த நல்லூர் உள்பட), சோழமாதேவி, கோடாலிக்கருப்பூர், வேம்புகுடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்கலாம்.

இதேபோல் அரியலூர் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நடைபெறும் ஜமாபந்தியில், அரியலூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட பொட்டவெளி, இலுப்பையூர், ராயபுரம், சென்னிவனம், ஓட்டக்கோவில், கோவிந்தபுரம், அமினாபாத் (ஐந்து துண்டுகள்), அரியலூர் வடக்கு, அரியலூர் தெற்கு, வாலாஜாநகரம், கயர்லாபாத், கல்லங்குறிச்சி, கடுகூர், அயன் ஆத்தூர், பெரியநாகலூர், தேளுர், காவனூர், விளாங்குடி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்கலாம்.

செந்துறை- ஆண்டிமடம்

செந்துறை தாசில்தார் அலுவலகத்தில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் ஜமாபந்தியில் செந்துறை உள்வட்டத்திற்கு உட்பட்ட ஆனந்தவாடி, உஞ்சினி, மருவத்தூர், பெரியாக்குறிச்சி, வஞ்சினபுரம், நமங்குணம், நக்கம்பாடி, செந்துறை ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்கலாம். ஆண்டிமடம் தாசில்தார் அலுவலகத்தில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெறும் ஜமாபந்தியில், ஆண்டிமடம் உள்வட்டத்திற்கு உட்பட்ட ஓலையூர், ஆத்துக்குறிச்சி, ஸ்ரீராமன், ராங்கியம், சிலுவைச்சேரி, அழகாபுரம், ஆண்டிமடம், விளந்தை (வடபாகம்), விளந்தை (தென்பாகம்), வரதராஜன்பேட்டை, பெரியகிரு‌‌ஷ்ணாபுரம், திருக்களப்பூர், அணிக்குதிச்சான் (வடபாகம்), அணிக்குதிச்சான் (தென்பாகம்) ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்கலாம்.

எனவே பொதுமக்கள் இந்த ஜமாபந்திகளில் பட்டா மாறுதல், பெயர் மாறுதல், நில அளவை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட தனிப்பட்ட கோரிக்கை மற்றும் பொதுவான கோரிக்கை மனுக்களை அளித்து உடனடி தீர்வு காணலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story