ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் குறுவை சாகுபடிக்காக 1,300 டன் யூரியா தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது


ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் குறுவை சாகுபடிக்காக 1,300 டன் யூரியா தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 30 Jun 2019 10:45 PM GMT (Updated: 30 Jun 2019 7:00 PM GMT)

ஆந்திராவில் இருந்து சரக்கு ரெயிலில் குறுவை சாகுபடிக்காக 1,300 டன் யூரியா தஞ்சை வந்தது. இங்கிருந்து தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பிவைக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு தண்ணீர் இல்லாததால் அணை திறக்கப்படவில்லை.

வழக்கமாக திறக்கப்படும் தேதியில் அணை திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். இல்லையென்றால் குறுவை பரப்பளவு குறைந்த சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தற்போது தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு மூலம் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

யூரியா உரம்

இந்த குறுவை சாகு படிக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தேவையான உரங்கள் வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரெயிலில் 1,300 டன் யூரியா உரம் 21 வேகன்களில் நேற்று தஞ்சை வந்தது.

தஞ்சையில் இருந்து இந்த உரங்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங் களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story