திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை


திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
x
தினத்தந்தி 4 July 2019 10:15 PM GMT (Updated: 4 July 2019 7:43 PM GMT)

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருச்சி,

திருச்சி மாவட்டம், மணப்பாறை கே.பெரியபட்டியை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 27). கூலித்தொழிலாளியான இவருக்கும், திருச்சியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதன் அடிப்படையில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணிடம் சென்ற அசோக்குமார் அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். அதன்பிறகு அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அசோக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி வனிதா நேற்று தீர்ப்பு கூறினார்.

அந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட அசோக்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும், ஒரு வருட சிறை தண்டனையும் விதித்து இருந்தார்.

Next Story