வேளாங்கண்ணியில் எலி மருந்தை தின்று பெண் தற்கொலை போலீசார் விசாரணை


வேளாங்கண்ணியில் எலி மருந்தை தின்று பெண் தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 9 July 2019 10:15 PM GMT (Updated: 9 July 2019 6:48 PM GMT)

வேளாங்கண்ணியில் சிதம்பரத்தை சேர்ந்த பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேளாங்கண்ணி,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வாசீசநகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி இந்திரா (வயது 40). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்த இந்திரா கடந்த 7-ந் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு வந்துள்ளார். அப்போது இந்திரா, எலி மருந்தை (விஷம்) தின்று விட்டு தனது ஊருக்கு திரும்பி சென்றுள்ளார். அவர் வீட்டிற்கும் சென்றதும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இந்திரா பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story