திருவாரூரில் இருந்து திருவள்ளூருக்கு அரவைக்காக 950 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது


திருவாரூரில் இருந்து திருவள்ளூருக்கு அரவைக்காக 950 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 10 July 2019 10:30 PM GMT (Updated: 10 July 2019 6:37 PM GMT)

திருவாரூரில் இருந்து திருவள்ளூருக்கு அரவைக்காக 950 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு நெல் மூட்டைகள் சேமிப்பு நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டன. இந்த நெல் மூட்டைகள் பொது வினியோக திட்டத்தில் அரிசியாக வழங்குவதற்காக அரவைக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நெல் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அதன்படி நேற்று திருவாரூர் மற்றும் அதனை சுற்றி உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து நெல் மூட்டைகள் 71 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

950 டன் நெல்

இதனையடுத்து லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள், சரக்கு ரெயிலில் ஏற்றினர். பின்னர் 21 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 950 டன் சன்னரக நெல் மூட்டைகள் அரவைக்காக திருவாரூரில் இருந்து திருவள்ளூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story