நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 945 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது


நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 945 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 18 July 2019 10:30 PM GMT (Updated: 18 July 2019 8:07 PM GMT)

நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 945 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

நீடாமங்கலம்,

விவசாயிகளிடம் இருந்து நேரடி அரசு கொள்முதல் நிலையம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து அரவைக்காக வெளிமாவட்டங்களுக்கு சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நீடாமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு 945 டன் நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

இதையொட்டி நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் அசேஷம், ஆதனூர், தலையாமங்கலம், இடையர்நத்தம், தெற்குநத்தம், மூவாநல்லூர் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்கள், சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் 75 லாரிகளில் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் தர்மபுரிக்கு புறப்பட்டு சென்றது.


Next Story