லாலாபேட்டை அருகே லாரியை மறித்து டிரைவரிடம் பணம் பறிப்பு 2 வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


லாலாபேட்டை அருகே லாரியை மறித்து டிரைவரிடம் பணம் பறிப்பு 2 வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 July 2019 10:15 PM GMT (Updated: 20 July 2019 7:48 PM GMT)

லாலாபேட்டை அருகே லாரியை மறித்து டிரைவரிடம் பணம் பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

லாலாபேட்டை,

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் நேற்று முன்தினம் இரவு அரியலூரில் இருந்து லாரியில் சிமெண்டு லோடு ஏற்றிக்கொண்டு திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலை கரூர் மாவட்டம் திம்மாச்சிபுரம் புத்து கோவில் பகுதி வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென லாரியை நிறுத்தினர்.

பணம் பறிப்பு

இதையடுத்து லாரி டிரைவர் அவர்களிடம் ஏன் லாரியை நிறுத்தினீர்கள் என்று கேட்டார். அதற்குள் 2 வாலிபர்களும் கத்தியை காட்டி மிரட்டி, மாரீஸ்வரனிடம் இருந்த ரூ.4 ஆயிரத்தை 500-யை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரீஸ்வரன் திருடன்... திருடன்... என சத்தம் பேட்டார். அதற்குள் 2 வாலிபர்களும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மாரீஸ்வரன் லாலாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story