தஞ்சையில் இருந்து செங்கல்பட்டுக்கு அரவைக்காக 900 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பப்பட்டது


தஞ்சையில் இருந்து செங்கல்பட்டுக்கு அரவைக்காக 900 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பப்பட்டது
x
தினத்தந்தி 7 Aug 2019 10:30 PM GMT (Updated: 7 Aug 2019 8:27 PM GMT)

தஞ்சையில் இருந்து செங்கல்பட்டுக்கு அரவைக்காக 900 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பப்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு பொதுவினியோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் திருவள்ளூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப் படும்.

900 டன் நெல்

அதன்படி நேற்று தஞ்சையில் இருந்து 900 டன் நெல் சரக்கு ரெயிலில் 21 வேகன்களில் அரவைக்காக செங்கல்பட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக தஞ்சையில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றி வரப்பட்டு, பின்னர் சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story