உலக யானைகள் தினத்தையொட்டி மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் யானைக்கு பழங்கள் கொடுத்து வாழ்த்து


உலக யானைகள் தினத்தையொட்டி மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் யானைக்கு பழங்கள் கொடுத்து வாழ்த்து
x
தினத்தந்தி 13 Aug 2019 10:30 PM GMT (Updated: 13 Aug 2019 6:49 PM GMT)

உலக யானைகள் தினத்தையொட்டி மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் யானைக்கு பழங்கள், இனிப்புகள் கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

மன்னார்குடி,

உலக யானைகள் தினத்தையொட்டி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் யானை செங்கமலத்துக்கு மன்னார்குடி அனைத்து சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளின் ஒருங்கிணைப்பான நேசக்கரம் சார்பில் மாலை அணிவித்து பழங்கள், கீரை, வகைகள் உள்ளிட்ட தின்பண்டங்களை கொடுத்து வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மன்னார்குடி வர்த்தக சங்க தலைவர் பாரதிஜீவா தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் பாலகிருஷ்ணன், மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ், அரிமா சங்க தலைவர் சந்தோஷ், நேசக்கரம் ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், மீனாட்சி சூரியப்பிரகாஷ், கண்ணன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ராஜப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது செங்கமலம் யானையை பராமரித்து வரும் யானைப்பாகன் ராஜா, துணைப்பாகன் கார்த்தி ஆகியோரையும் பாராட்டினர்.

விழிப்புணர்வை ஏற்படுத்த...

இதுகுறித்து ஓய்வு பெற்ற கால்நடைத்துறை இணை இயக்குனர் டாக்டர் பால கிருஷ்ணன் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்திலேயே செங்கமலம் யானை மட்டுமே உள்ளது. தனது இனத்தை விட்டு பிரிந்து மனிதர்களுக்காக கோவில்களில் ஆன்மிக பணியை மேற்கொண்டு வருகின்ற யானைகளுக்கு பக்தர்கள் தொல்லை தரும் வகையில் நடக்கக் கூடாது. அதனை நேசிக்க வேண்டும் என்பதற்காகவும், அதற்கு கீரை, பழங்கள் கரும்பு, வெல்லம் உள்ளிட்ட சத்து மிகுந்த, விரும்பி சாப்பிடுகின்ற உணவு பொருட்களை பக்தர்கள் வழங்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story