மொபட்-மோட்டார்சைக்கிள் மோதல்: வாலிபர் பலி


மொபட்-மோட்டார்சைக்கிள் மோதல்: வாலிபர் பலி
x
தினத்தந்தி 15 Aug 2019 10:45 PM GMT (Updated: 15 Aug 2019 7:42 PM GMT)

தஞ்சை அருகே மொபட்-மோட்டார்சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை அருகே உள்ள குருங்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் கருப்பையன் (வயது22). இந்தநிலையில் சேகர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து கருப்பையன் தனது தாய் மற்றும் சகோதரியுடன் குருங்குளத்தில் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு ஏழுப்பட்டியில் இருந்து மருங்குளம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மொபட் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

விசாரணை

இதில் படுகாயமடைந்த கருப்பையனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story