சிறுகனூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 13 பேர் படுகாயம்


சிறுகனூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 13 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 17 Aug 2019 10:15 PM GMT (Updated: 17 Aug 2019 7:38 PM GMT)

சிறுகனூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நரசிங்க மங்கலத்தை சேர்ந்தவர் இளஞ்சியம் (வயது 60). இவரும் அதே பகுதியை சேர்ந்த 11 பேரும் நேற்று எதுமலையில் உள்ள கருப்பு கோவிலில் சாமி கும்பிடுவதற்காக திட்டமிட்டு ஒரு சரக்கு ஆட்டோவில் சென்றனர்.

ஆட்டோவை அப்பகுதியை சேர்ந்த கருப்பண்ணனின் மகன் ராமு (30) ஓட்டினார். அங்கு சாமி கும்பிட்ட பின்பு, அவர்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். பாலையூர் பஸ் நிறுத்தம் அருகே சரக்கு ஆட்டோ வந்த போது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

13 பேர் படுகாயம்

இதில் ஆட்டோ டிரைவர் ராமு, ஆட்டோவில் பயணம் செய்த இளஞ்சியம், அதே பகுதியை சேர்ந்த வடிவேலின் மனைவி தனலட்சுமி (39), அவரது மகள்கள் சுவேதா (18), அபிநயா (13), காவியா (11), மகன் விஷால், மற்றும் அதே பகுதியை சேர்ந்த சுகந்தி (23), மஞ்சுளா (40), தமிழ்வேணி, வடிவுக்கரசி (19), மாரியப்பன் (24), கிருஷ்ணமூர்த்தி ஆகிய 13 பேர் படுகாயம் அடைந்தனர். அந்தவழியாக வந்தவர்கள் இவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில், சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மதன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story