நாகையில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது


நாகையில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 19 Aug 2019 10:30 PM GMT (Updated: 19 Aug 2019 7:02 PM GMT)

நாகையில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

நாகப்பட்டினம்,

அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நாகை, சன்னமங்கலம், திருப்பூண்டி, அருந்தவம்புலம், சாட்டியக்குடி உள்ளிட்ட இடங்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி நாகையில் இருந்து திருச்சிக்கு அரவைக்காக 1,000 டன் பொதுரக நெல் சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி நாகை பகுதிகளில் உள்ள அரசு திறந்த வெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகளில் நாகை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டன.

பின்னர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து நெல் மூட்டைகளுடன் சரக்கு ரெயில் திருச்சிக்கு புறப்பட்டு சென்றது.

Next Story