அரசு மருத்துவமனை-ஆரம்ப சுகாதார நிலையங்களில் - 70 டாக்டர்கள் வேலை நிறுத்தம்


அரசு மருத்துவமனை-ஆரம்ப சுகாதார நிலையங்களில் - 70 டாக்டர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 27 Aug 2019 10:30 PM GMT (Updated: 27 Aug 2019 5:17 PM GMT)

தேனி மாவட்டத்தில் அரசு டாக்டர்கள் 70 பேர் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தேனி,

ஊதிய உயர்வு, காலம் சார்ந்த பதவி உயர்வு, மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, 5 அரசு மருத்துவமனைகள் மற்றும் 42 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் சுமார் 300 டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 50 பேர் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அதுபோல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 80 டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 20 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 70 டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலும் மக்களுக்கு பாதிப்புகள் இல்லை. அங்கு பணியில் இருந்த சக டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பரிதவித்தனர். பலரும் ஏமாற்றத்துடன் திரும்பினர். 

Next Story