தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை


தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 31 Aug 2019 9:45 PM GMT (Updated: 31 Aug 2019 8:39 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஸ்பிக்நகர், 

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் மாடசாமி மகள் ஆறுமுகத்தாய் (வயது 20). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாய் கோமதியிடம் புதிய செல்போன் வாங்கி தர கேட்டார். அதற்கு கோமதி குடும்ப சூழல் காரணமாக பழைய செல்போனை தற்போது பயன்படுத்த கூறினார். இதனால் மனமுடைந்த ஆறுமுகத்தாய் நேற்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்துங்கநல்லூர் கஸ்பா வேளாளர் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன் (56). விவசாயியான இவர் செய்துங்கநல்லூரில் முறுக்கு கடை நடத்தி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்த நிலையில் இருந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் பரமசிவன், சேரகுளம் தீராத்திகுளத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பரமசிவன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், சேரகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story