விநாயகர் சிலைகளை ஏரிகளில் கரைப்பதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்


விநாயகர் சிலைகளை ஏரிகளில் கரைப்பதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 Sep 2019 10:45 PM GMT (Updated: 1 Sep 2019 7:24 PM GMT)

ஏரிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் கூறினார்.

தஞ்சாவூர்,

நீர்நிலைகள் நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் போது விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.

களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எந்தவித ரசாயன கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும்.

அனுமதிக்கப்பட மாட்டாது

நீர்நிலையில் கரையும் தன்மையுடைய, தீங்கு விளைவிக்காத இயற்கை வர்ணங்கள் உடைய விநாயகர் சிலைகளை உபயோகிக்க வேண்டும். ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்பட மாட்டாது. விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க அனுமதிக்கப்படும்.

கடலோரத்தில், ஏரிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதை தவிர்க்க வேண்டும். கடலில் குறைந்தபட்சம் அரை கி.மீ. தூரம் எடுத்துச்சென்று கரைக்க வேண்டும்.

சுற்றுச்சூழல்

தஞ்சை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டிய இடங்கள் வருமாறு:-

தஞ்சையில் வடவாறு, கல்லணைக்கால்வாயிலும், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், சுவாமிமலை பகுதிகளில் காவிரி ஆற்றிலும், திருபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுறை பகுதிகளில் வீரசோழன் ஆற்றிலும், பட்டுக்கோட்டை, பேராவூரணி, கடலோர பகுதிகளில் உள்ள சிலைகளை கடலில் கரைக்க வேண்டும்.

இந்த இடங்களில் போலீசாரின் முன்அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story