அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெயிண்டர் சாவு - போலீசார் விசாரணை


அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெயிண்டர் சாவு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Sep 2019 11:00 PM GMT (Updated: 7 Sep 2019 9:12 PM GMT)

கத்திக்குத்து காயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெயிண்டர் இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஸ்ரீரங்கம்,

திருச்சி திருவானைக்காவல் வடக்கு 5-ம் பிரகாரம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 58). பெயிண்டரான இவர் கடந்த 5-ந் தேதி இரவு திருவானைக்காவல் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நின்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு திருவானைக்காவல் ஒத்தத்தெருவை சேர்ந்த கிரு‌‌ஷ்ணகுமார் (20) உள்பட 2 பேர் வந்தனர். அவர்களிடம் மது வாங்க பணம் தரும்படி நாராயணன் கேட்டதாகவும், பணம் தர மறுத்ததால் அவர்களை திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிரு‌‌ஷ்ணகுமார் கத்தியால் நாராயணனின் இடுப்பில் குத்தினார்.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிரு‌‌ஷ்ணகுமாரை கைது செய்தனர்.

இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நாராயணன் இறந்தார். இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story